Home » Posts tagged with » Netrikkan (Page 75)

சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

Comments Off on சல்மான் கானை கொல்லத் துடிக்கும் நபர் யார்?

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அதிர்ச்சிக்குரிய பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சில தினங்களுக்கு முன் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு அதிகாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் என டில்லி சிறையில் உள்ள கூலிப்படை தலைவன் அன்மோல் […]

Continue reading …

ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

Comments Off on ரயில்வேயில் 4,660 வேலைவாய்ப்புகள்!

10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்திய ரயில்வே துறையில் ரயில்வே பாதுகாப்பு படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10வது அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு […]

Continue reading …

கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

Comments Off on கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் நான்கு கட்சிகளுமே மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரமும் […]

Continue reading …

தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

Comments Off on தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

ரூ.1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி அன்று நாடு முழுதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் […]

Continue reading …

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

Comments Off on இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

இன்று சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி அதன் பிறகு விவாகரத்து பெற்றார். தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண […]

Continue reading …

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “வாக்குப்பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Continue reading …

திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]

Continue reading …

புவிசார் குறியீடு குறித்து ராதிகா சரத்குமார் பேச்சு!

Comments Off on புவிசார் குறியீடு குறித்து ராதிகா சரத்குமார் பேச்சு!

பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி, சின்ன பேராலி, பாண்டியன்நகர், ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில், “நாடுமுழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். வெற்றிபெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இடைத்தரகரே இல்லாமல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

Continue reading …

கவிதா ஆவேசம்!

Comments Off on கவிதா ஆவேசம்!

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் […]

Continue reading …

2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

Comments Off on 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கம்!

ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் […]

Continue reading …