Home » Posts tagged with » Netrikkan (Page 76)

பிரச்சாரத்திற்கு 1 மணி நேரம் நீட்டிப்பு!

Comments Off on பிரச்சாரத்திற்கு 1 மணி நேரம் நீட்டிப்பு!

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Continue reading …

கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

Comments Off on கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் […]

Continue reading …

32வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

Comments Off on 32வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் […]

Continue reading …

பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

Comments Off on பறக்கும் படை சோதனையில் வரலாறு காணாத பணம் பறிமுதல்!

தேர்தல் ஆணையம் நாடு முழுதும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் […]

Continue reading …

11 கோணங்களில் திரைக்கதையில் முதல் தமிழ் திரைப்படம்!

Comments Off on 11 கோணங்களில் திரைக்கதையில் முதல் தமிழ் திரைப்படம்!

“சிறகன்” என்ற தலைப்பில் மேட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ளது. கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் ஜிடி, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார். வெங்கடேஷ்வராஜ். இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் விதி. டெக் மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் […]

Continue reading …

அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

Comments Off on அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 10.30 மணிக்கு பின் வந்துள்ளார். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதையடுத்து […]

Continue reading …

தனுஷை மகன் என கூரிய முதியவர் உயிரிழப்பு!

Comments Off on தனுஷை மகன் என கூரிய முதியவர் உயிரிழப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கோரிய கதிரேசன் என்ற முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் தனது மகன் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் சிறுவயதில் காணாமல் போன மகன்தான் தனுஷ் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. […]

Continue reading …

அமித் ஷா ‘ரோடு ஷோ’!

Comments Off on அமித் ஷா ‘ரோடு ஷோ’!

மத்திய அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தக்கலையில் ரோடு ஷோ மேற்கொண்டார். மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Continue reading …

அதிமுக டிடிவி தினகரன் வசமாகும்; அண்ணாமலை!

Comments Off on அதிமுக டிடிவி தினகரன் வசமாகும்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில், “டிடிவி தினகரன் கையில் அதிமுக முதலிலே சென்று இருந்தால் ஸ்டாலின் […]

Continue reading …

சிட்னியில் துப்பாக்கி சூடு! 6 பேர் பலி!

Comments Off on சிட்னியில் துப்பாக்கி சூடு! 6 பேர் பலி!

வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவம் சிட்னியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப்பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பலரும் கடைகளுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கியிருக்கிறார்கள். […]

Continue reading …