
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் ’கிழக்கு சீமையிலே’ கேரக்டர் போல் நடித்துக் காமிங்கள் என்று கேட்டுக் கொல்ல உடனே அவர் நடித்து காண்பித்தது வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே போட்டி சரிசமமாக இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் […]
Continue reading …
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது “தி கோட்” படத்தில் நடித்து வருகிறார். அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்துக்குப் பின் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் […]
Continue reading …
டிபன் கடையில் சாப்பிட்டுவிட்டு ரூ.20ஐ கொடுக்காமல் சென்ற விவசாயியை அக்கடைக்காரர் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கொன்னக்குடி கிராமத்தை சேர்ந்த 58 வயதான ஏசுதாஸ் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் ஏசுதாஸ் அதே பகுதியில் ஜோசப்ராஜ் நடத்தி வந்த ஓட்டலில் டிபன் சாப்பிட்டுள்ளார். அதில் ரூ.20 தர வேண்டியது இருந்த நிலையில் கடனாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதை அவர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. கடந்த 8ம் தேதி […]
Continue reading …
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக செலவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ களம் இறங்கி உள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவு அவருக்கு இருந்தாலும் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சியில் துரை வைகோவுக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகிய இருவரும் […]
Continue reading …
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ள அடுத்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கிறார்கள். ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ […]
Continue reading …
வீட்டிற்குள் நுழைந்த பாம்பிடம் சண்டையிட்டு குழந்தைகளை காப்பாற்றி நாய் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்திலும் நன்றியிலும் முதலிடத்தில் இருப்பது நாய்கள்தான். அந்த பாசத்திற்காக நாய் உயிரையே விட்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூரில் உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரன். இவரும், இவரது மனைவி சாந்தியும், 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் சகிதம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக ஹெண்ட்ரி என்று ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளனர். குடும்பத்தினரிடம் மிகவும் […]
Continue reading …
பிரதமர் மோடி திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது. ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளது.வறுமையில் […]
Continue reading …
தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் தனது தாயார் சத்யாவுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து விட்டு இரவு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அவரது வீட்டின் கதவை தட்டியது, இதையடுத்து விஜயகாந்த் எழுந்து கதவை திறந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த மர்ம கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி […]
Continue reading …
அண்ணாமலை, “இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது” தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, “திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக கூட்டணி […]
Continue reading …
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் […]
Continue reading …