சென்னை,மே 18 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் […]