அகில இந்திய அளவில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறை. பலரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.