அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையா?

Filed under: உலகம் |

திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மதியம் 12.43 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேத விவரம் எதுவும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.