ஆளுநர் பேசியதை குறித்து தமிழிசை விளக்கம்!

புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று ஏன் அழைக்க வேண்டும் என்றால் பிரிவினைவாத எண்ணம் இருக்கக்கூடாது என்றுதான், இந்தியா என்ற நாட்டிற்குள் தமிழ்நாடு என்ற மாநிலம் அடக்கம் என்ற வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தமிழ்நாடு என்பது தனிநாடு என்ற அர்த்தத்தில் இருக்கக் கூடாது, அதனால் தான் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்க வேண்டுமென்று ஆளுநர் தெரிவித்திருக்கலாம். அவர் அவ்வாறு கூறியதாக நான் கருதுகிறேன். பிரிவினைவாத என்ணம் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதால் தான் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டுமென ஆளுநர் கூறியுள்ளார்” என புதுவை ஆளுநரை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.