ஆஸ்கர் பட்டியலுக்கு வாய்ப்பு பெற்ற படம்!

Filed under: சினிமா |

“ஷ்யாம் சிங்கா ராய்” திரைப்படம் ஆஸ்கர் பட்டியலின் மூன்று பிரிவுகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் “ஷ்யாம் சிங்கா ராய்” சுமாரான வரவேற்பைப் பெற்றது. 2021ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியான “ஷ்யாம் சிங்கா ராய்” பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்திய சினிமா காலம்காலமாக பார்த்துப் பழகிய முன் ஜென்மத்து காதல் கதை என்றாலும் பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகளின் முற்போக்கு கருத்தியலாலும் நானி மற்றும் சாய்பல்லவியின் நடிப்பாலும் கவரப்பட்டு இப்போது அதிகளவில் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரத்தில் நெட்பிளிக்ஸில் ஆங்கிலம் இல்லாத மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் உலகளவில் மூன்றாம் இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் ஷ்யாம் சிங்கா ராய் இடம் பிடித்தது. இப்போது இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இப்படம் உள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று கால திரைப்படம், பின்னணி இசை மற்றும் பாரம்பரிய கலாச்சார நடனம் உள்ள படம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.