கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சென்னையிலிருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் மிக விரைவில் செல்லும் இடம் சென்று விடலாம் என்பதால் பயணிகள் இந்த ரயிலை தேர்வு செய்து பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்குவங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது, இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றி பெற்றதை அடுத்து இந்த ரயில் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளார்.
Related posts:
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் தீவிர விசாரணை!
உத்தரகாண்டில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா!
கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்து முதலமைச்சர் மு....
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!