இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 28:
நம் நாட்டில், 201 நாட்களுக்குப் பின், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்:

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,795 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,36,97,581 ஆக உயர்ந்துள்ளது. 201 நாட்களுக்குப் பின், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதல்முறையாக, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

26,030 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,29,58,002 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில், 179 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, பலி எண்ணிக்கை, 4,47,373 ஆக உயர்ந்துள்ளது. 2,92,206 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த, 24 மணி நேரத்தில், 1,02,22,525 தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன; இதுவரை, 87,07,08,636 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.