இருநாட்டு மக்களும் செயலியால் மகிழ்ச்சி!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

இந்தியாவின் யூபிஐம், சிங்கப்பூரின் பேநௌ ஆகிய இரண்டு பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலிகள் தொடங்கி உள்ளதால் இருநாட்டின் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்குமான இச்செயல் இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்கள் எளிய முறையில் குறைந்த செலவில் பணம் பரிமாற்றம் செய்து பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் மிக வேகமாக இயங்கி வரும் பேநௌ செயலி, இந்தியாவின் யூபிஐ தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வங்கிகளுக்கு பணம் அனுப்பும் முறை எளிமையாக்கப்படும்.