ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்!

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 28:

‘திருவண்ணாமலை கோவிலின் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பிக்கலாம்’ என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்புவோர், வரும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, இந்து சமய அறநிலையத்துறை நேற்று வெளியிட்டது.

அதன்படி, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள், குரல் வளம், உடல் வளம் உடையவர்கள், சமய தீட்சை பெற்றவர்கள் உள்ளிட்ட சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.