சூர்யா திரைப்படம் ஓடிடியில் ரிலீசா?

Filed under: சினிமா |

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’ ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கடைசியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் “நாச்சியார்.” பின்னர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. “வணங்கான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு திரைப்படம் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.