சோனியா காந்தி ஆஜராக சம்மன்!

Filed under: அரசியல் |

சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார். ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் நோய் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடவே, வரும் 21ம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்கு வரும் 21ம் தேதி சோனியாகாந்தி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.