தனுஷின் படப்பிடிப்பு ஆரம்பம்!

Filed under: சினிமா |

நடிகர் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. அதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதையடுத்து தென்காசியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. நடிகர் தனுஷ் இதுவரை எடுத்தக் காட்சிகளை போட்டு பார்த்த மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். விரைவில் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்குமென கூறப்படுகிறது.