துருக்கி நாட்டு தூதர் இந்தியாவிற்கு புகழாரம்!

Filed under: இந்தியா,உலகம் |

துருக்கி நாட்டு தூதர் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாம் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன. அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன. இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என துருக்கி நாட்டு தூதர் பிராட்ஸ் மால் தெரிவித்துள்ளார். மேலும் 6000 கட்டிடங்கள் விழுந்துள்ளதாகவும் மூன்று விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.