பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

Filed under: அரசியல்,இந்தியா |

லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக எம்எல்ஏ வீட்டில் ரூபாய் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.