பாஜக நிர்வாகியின் கொடூரம்!

Filed under: இந்தியா |

ஜார்க்கண்ட்டில் பாஜக நிர்வாகி கொடூரத்தின் உச்சத்தை நிகழ்த்தியுள்ளார். வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை பாஜக நிர்வாகி சீமா பத்ரா கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சீமா பத்ரா. இவரது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார். வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் தெரிகிறது. அதில் அந்த பெண்ணின் பல பற்களைக் காணவில்லை. அந்த பெண்ணால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. அந்த பெண் மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்டதையே அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காட்டுகிறது. இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் மிகுந்த வேதனையுடன் பேசிய அந்த பெண், சூடான தவா மற்றும் கம்பியால் எல்லாம் தன்னை தாக்கியதாகத் தெரிவித்தார். மேலும், சீமா பாத்ரா தனது பற்களையும் அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் ஒரு கட்டத்தில் கழிப்பறையில் இருந்த சிறுநீரைக் கூட நக்க வைத்தாகத் தெரிவித்துள்ளார். சீமா பத்ராவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்திகின்றனர்.

சீமா பத்ராவை ஜார்கண்ட் பாஜக இடைநீக்கம் செய்து ஜார்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ் உத்தரவிட்டார். மேலும், பழங்குடியினப் பெண்ணை கொடுமைப்படுத்தியது தொடர்பாக சீமா பத்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சீமா பத்ராவின் கணவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா ஆவர்.