பிளாட் ஆனதா “அகிலன்” திரைப்படம்?

Filed under: சினிமா |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள “அகிலன்” திரைப்படம் பிளாப் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் “பூலோகம்.” இப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இப் படத்துக்கு “அகிலன்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீசாகவேண்டிய திரைப்படம் தாமதமாகி வந்த நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி ரிலீசானது. கடந்தாண்டு “பொன்னியின் செல்வன்” என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த ரிலீசாக “அகிலன்” ரிலீசானது. ஆனால் படம் கொஞ்சம் கூட ரசிகர்களைக் கவரவில்லை. ஜெயம் ரவியின் கேரியரில் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.