மணமகனை 20கிமீ துரத்திப் பிடித்த மணமகள்!

Filed under: இந்தியா |

திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணமகன் மண்டத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பதான் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவெடுத்தனர். இருவீட்டாரின் கலந்துபேசி ஞாயிற்றுக்கிழமையன்று பூதேஸ்வர நாத் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். திருமண தினத்தன்று மணமகன் வெகு நேரமாகியும் மேடைக்கு வரவில்லை. மணப்பெண் திருமணத்திற்குக் காத்திருக்கும்போது, போனில் நீண்ட நேரல் எதோ காரணம் சொல்லி வந்துள்ளார். பின்னர், மணமகள் பேருந்து நிலையத்திற்குச் சென்று, மணமகனை பரேலியில் இருந்து சுமார் 20கிமீ தூரம் வரை துரத்திச் சென்று, பீமோரா காவல் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் போது அவரைக் கண்டுபிடித்து, மீண்டும் அவரை மண்படத்திற்கு கூட்டி சென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,