மத்தியில் அமைச்சருக்கு வேறு துறை ஒதுக்கீடு!

Filed under: அரசியல்,இந்தியா |

மணீஸ் சிசோடியாவை டில்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் பேரில் சிபிஐ கைது செய்துள்ளது. இதையடுத்து மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் மணீஸ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. இன்று டில்லி சட்டப்பேரவையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் உள்ள இரண்டு அமைச்சர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் (பாஜக) ராம்வீர் சிங் பிதூரி தெரிவித்து, அமைச்சரவையை மாற்ற வேண்டுமென்று கூறினார். இதையடுத்து, புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள மணீஷ்சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். ராஜினாமா செய்த மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு நிதித்துறையும், அமைச்சர் ராஜ்குமார் ஆனந்துக்கு கல்வி உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.