மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; ராகுல்காந்தி ஆவேசம்!

Filed under: அரசியல்,இந்தியா |

ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி” என்று ஆவேசமாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி மோடி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அவர் லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் ஆவேசம் அடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி. சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன். நான் இந்திய ஜனநாயகத்திற்காக போராடி வருகிறேன், என்னைப் பற்றி இன்னும் அவர்களுக்கு சரியாக புரியவில்லை” என்றும் அவர் பேசியுள்ளார்.