மாணவி பலி!

Filed under: தமிழகம் |

பேருந்தின் படியில் இருந்து விழுந்த மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் ஆப் த டாப்பிக்காக உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.