முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Filed under: அரசியல் |

நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக திமுகவினர் பொதுவெளியில் பேசுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரின் அறிக்கை வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பேருந்து குறித்து பேசிய வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வருமாறு, “நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் அளிக்காத வகையில் கவனமுடன் செயல்படுவோம். நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம். திமுக மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகளை திரித்து வெளியிடக்கூடிய செயல் தொடர்கிறது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலகம் விளைவிக்க நச்சு சக்திகள் முயற்சிக்கின்றன. திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பிக்கள் பேசியதை தவறான பொருள்படும்படி வெட்டி, ஒட்டி வெளியிடுகிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படும் நச்சு சக்திகளுக்கு எந்த வகையிலும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. மக்களுக்கான பணியை மட்டும் கவனிப்போம்” என்று அறிவித்துள்ளார்.