முதல்முறை தமிழகம் வரும் ஜனாதிபதி?

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் திரௌபதி முர்மு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடியின அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் பிப்ரவரி பிப்ரவரி 18ம் தேதி மதுரை வர இருப்பதாகவும் அன்றைய தினம் அவர் மீனாட்சி அம்மனை தரிசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.