முருகதாஸூடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Filed under: சினிமா |

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “தர்பார்” திரைப்படத்தின் தோல்வியால் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை “ஸ்பைடர்” படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்மாலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என சொல்லப்படுகிறது.