வானதி சீனிவாசன் கருத்து!

Filed under: அரசியல் |

பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு நாட்களாக நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. கடந்த 7 நாட்களில் நடந்த சுற்றுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து லட்சம் கோடிக்கு விற்க வேண்டிய ஏலம் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. மீதமுள்ள பணம் எங்கே சென்றது, அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் லாபத்தை பெற்று தந்துள்ளது. அலைக்கற்றை பற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்குதான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என தெரியும்” என கூறியுள்ளார்.