அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் எப்போது?

Filed under: சினிமா |

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. திருமண தேதி குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

நடிகர் அசோக் சொல்லன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தை அருண்பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் நடத்த திட்டம் இடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண தேதி மற்றும் பிற விபரங்கள் அதிகாரபூர்வமாக அருண்பாண்டியன் தரப்பிலிருந்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாக்கி வரும் “ப்ளூ ஸ்டார்” திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சாந்தனு பாக்கியராஜ் பிரத்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிப்பு வருகின்றனர். செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. அதே செப்டம்பர் மாதம் தான் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் திருமணமும் நடைபெற உள்ளது.