அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை?

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை தொடரும் என கூறியிருப்பதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளையும் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.