அண்ணனுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய சண்முக பாண்டியன்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

விஜய பிரபாகரன் தம்பி சண்முக பாண்டியனுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்‌. முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது சண்முக பாண்டியன், “இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன். ஒரு முறையாவது எனது அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம் என மக்கள் வருத்தப்பட்டார்கள், என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம், அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை என்னுடைய அண்ணன் இத்தொகுதியில் இருந்தே மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அதை தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, மகனாக விஜய பிரபாகரன் நிற்கிறார். அவருக்காக நீங்கள் முரசு சின்னத்திலே வாக்களியுங்கள்” என்று சண்முக பாண்டியன் கேட்டுக்கொண்டார்.