அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சி அரசியல் மாயையில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 7ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது. அதிமுகவில் பிளவு ஏற்படும்போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவர். பொதுக்குழு செல்லும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பற்றிக் கூறமாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கூறியது என்ன ஆனது. நிரந்தர பொதுச்செயலாளார் ஜெயலலிதா என்று தீர்மானம் நிறைவேற்றினார்களே அது என்ன ஆனது? மக்கள் மன்றத்திற்கு செல்வதே தீர்வாக அமையும். எடப்பாடி நடத்தும் செயற்குழு உள்ளிட்ட கூட்டங்கள் செல்லாது. வரும் ஏப்ரல் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தவிருக்கிறோம்’’ என்று கூறினார்.