அமைச்சர்களுக்கு சம்பளமில்லை!

Filed under: உலகம் |

அமைச்சர்களுக்கு இனி சம்பளமில்லை என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார திண்டாட்டத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். புதிதாக பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றதும் செலவினங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு ஆண்டிற்கு ஊதியமில்லாமல் பணிபுரிய அமைச்சர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து இலங்கையில் இனிமேல் அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.