திடீரென உடல்நல குறைவால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததாகவும் இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துறைமுகத்திற்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் வழங்கி வருகிறார்கள். அவரது உடல்நலம் குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று அல்லது நாளை அமைச்ச துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.