அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Related posts:
திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ...
ரேசன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய்.50,000 சிறுகடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜீ!
சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியில் இருந்து நீக்கம்
லியோ படத்தின் அனுமதி குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!