அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்!

Filed under: அரசியல் |

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது என கூறியுள்ளார்.

இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே இளைஞர்கள் சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், “மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டிற்கு பிழைப்புகாக வேலை தேடி வருகின்றனர். தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான்!’’’ என்று பதிவிட்டுள்ளார்.