அமைச்சர் முத்துச்சாமி பேட்டி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் முத்துச்சாமி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம், “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின் கீழ் 5.11 கோடி மதிப்பில் 1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்றிலிருந்து 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இம்முகாம்களில் நடத்தபட உள்ளதாகவும் 15 துறைகள் இதில் பங்கேற்கும் எனவும் 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம் எனவும் 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும். டெட்ரா பாட்டில் குறித்தான கேள்விக்கு நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதாகவும் அதை எல்லாம் பார்த்த பின்பு தான் நடவடிக்கைகள் கொடுக்க வேண்டும் பிறகு தான் முடிவை கூற முடியும். கள்ளு கடை திறப்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அது மிகப்பெரிய பாலிசியான முடிவு எனவும் அது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் அதன் பிறகு தான் பதிலளிக்க முடியும். கள்ளுக்கடை திறப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கை தானே என கேள்வி எழுப்பிய அவர் ஏன் இத்தனை நாட்களாக அதனை செய்யவில்லை என்று நானும் கேள்வி எழுப்பலாம் தானே? கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல. அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் உள்ளது. அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் பில்லிங் யில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வருவதாகவும் இனிமேல் அந்த பில்லிங் சிஸ்டம் ஒழுங்காக நடைபெறும்.மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மனுவை விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை பொதுமக்கள் திமுக பக்கமும் முதலமைச்சர் பக்கமும் முழுமையாக நிற்பதை நேரடியாக பார்க்க முடிகிறது. மாபெரும் வெற்றியை பொதுமக்கள் அளிப்பார்கள் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்களோ அதே போன்று விக்கிரவாண்டிலும் கொடுப்பார்கள். அதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முதலமைச்சர் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கை எனவும் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய ஆதரவை தங்களால் காண முடியும்” என்று கூறினார்.