“அரண்மனை 4” மூன்று நாள் வசூல் இவ்வளவா?

Filed under: சினிமா |

நகைச்சுவையோடு பேய்ப் படங்களில் தமிழில் 2014ல் வெளிவந்த “அரண்மனை” படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்குண்டு. அப்போது தொடங்கிய “அரண்மனை” வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் “அரண்மனை” படத்தின் 4ம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 3ம் தேதி ரிலீசானது. கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் படத்தின் வசூல் விமர்சனங்களைத் தாண்டி பெரியளவில் உள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் படம் உலகளவில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் விரைவில் இணையும் என சொல்லப்படுகிறது.