அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமினில் வெளியே வருவதற்கும் விசாரணை நடத்துவதற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்றும், ஜாமின் கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதால் அவருக்கென்று சில உரிமைகள் உள்ளதாகவும், அவரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.