மதுபான வழக்கில் சிக்கி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். வழக்கறிஞர் அமர்ஜித் குப்தா என்பவர் சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, “உயர்நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைக்கு இம்மனு பொருந்தாது. சிறையிலிருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிப்பது சட்டத்துக்கு முரணானது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தெரிவித்தார்.