அர்ஜெண்டினாவில் அதிர்ச்சி!

Filed under: உலகம் |

தொடர்ந்து விஷ ஊசி செலுத்தி பிறந்த குழந்தைகளை செவிலியர் ஒருவர் கொன்றது அர்ஜெண்டினாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகப்பேறு மருத்துவமனை அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கார்டோபோ நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்கள் ஆரோக்கியமாக இருந்த குழந்தை பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் குழந்தை உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. குழந்தையின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. அதனால் இந்த குழந்தைக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதத்திற்கு அந்த மருத்துவமனையில் 5 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளன. அவற்றில் மற்றொரு குழந்தையின் மருத்துவ பதிவுகளை ஆராய்ந்ததில் அதே பொட்டாசிய பிரச்சினையால் அந்த குழந்தையும் இறந்தது தெரிய வந்துள்ளது. விசாரணையில் மருத்துவமனை செவிலியர் பிரண்டா அகுவேரா தான் குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.