ஆன்லைன் விளையாட்டால் இளைஞர் ரயிலில் விழுந்து தற்கொலை!

Filed under: தமிழகம் |

இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மன விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சந்தோஷ் (வயது 23) என்ற கல்லூரி மாணவன் ஆன்லைனில் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனவிரக்தியில் இருந்த அவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.