ஆயுஸ் மருத்துவம் குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம்

Filed under: இந்தியா |

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆயுஸ் மருத்துவம் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆயுர்வேதார், சித்தா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்டவற்றிற்கான ஆயுஸ் மருத்துவமனையை தலைநகர் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அப்போது அவர், “ஆயுஸ் அமைச்சகத்துட்ன கொரொனா தொற்று காலத்தில் இருந்தே தொடரில் இருக்கிறேன். எனக்கு முதல்முறை கொரொனா தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஆயுஸில் இருக்கும் ஒரு வைத்தியரின் எண்ணைக் கொடுத்து பேசும்படி கூறினார். அவர் கூறியதைப் பின்பற்றினேன். 2வது, 3வது முறை கொரொனா தொற்று பாதித்தபோது, ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளாமலே சரியாகிவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.