ஆவின் பால் விலை குறித்து அண்ணாமலை ஆவேசம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பால்வளத்துறை இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணாமலை, “ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. தமிழ்நாடு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை. திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர், காமராஜரை அவதூறுகள் மூலம் தான் தோற்கடித்தனர், அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” என அண்ணாமலை ஆவேசமாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.