இந்தியாவில் புதிதாக 23,529 பேருக்கு கொரோனா தொற்று

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 28:
நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 23,529 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 23,529 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,39,980 ஆக உயர்ந்துள்ளது.

28,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,30,14,898 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில், 311 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, பலி எண்ணிக்கை, 4,48,062 ஆக உயர்ந்துள்ளது. 2,77,020 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த, 24 மணி நேரத்தில், 65,34,306 தடுப்பூசி டோஸ்கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன; இதுவரை, 88,34,70,578 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.