இந்திய கடற்படையினரின் அதிரடி!

Filed under: உலகம்,தமிழகம் |

அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 14 இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர் அவர்களது படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது அதே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.