இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை; பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

Filed under: அரசியல்,இந்தியா |

நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் பாஜக சார்பில் நின்று வென்று அமைச்சரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியுள்ளார்.

பாஜக கூட்டணி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் கேரளாவில் முதல் முறையாக ஒரு சீட்டை மலையாள நடிகர் சுரேஷ் கோபி மூலம் கைப்பற்றி தடம் வைத்துள்ளது. சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றதால், அவருக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என குறிப்பிட்டிருந்தார். தான் சார்ந்த பாஜக கட்சியினர் தொடர்ந்து நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சுரேஷ் கோபி இவ்வாறு பேசியது பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுரேஷ் கோபி “இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என நான் கூறியது எனது இதயத்தில் உள்ள கருத்து. என் மனதில் உள்ளதை சொன்னதில் எந்த தவறும் இல்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னைதான். இந்தியாவை கட்டி எழுப்பியவர் அவர். எதிர்கட்சி என்பதால் அவரை மறுக்கவோ மறக்கவோ முடியாது” என்று கூறியுள்ளார்.