இனி தியேட்டர்களில் டிரெயிலர் ஒளிபரப்பில்லை!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரெயிரலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில் கடந்த 5ம் தேதி மாலை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியானது. இந்த டிரெயிலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக கடந்த 5ம் தேதி திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். “லியோ” டிரெயிலர் 6:30 மணிக்கு ரிலீசானது. “லியோ” டிரெயிலர் சிறப்பு காட்சியின் போது ரோகிணி திரையரங்கில் இருக்கைகளை விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானது. இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு முறையாக அனுமதி வழங்கி, கையாண்டிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இனி தியேட்டர்களில் டிரெயிலர்கள் வெளியீடு இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி தியேட்டரில் “லியோ” டிரெயிலரை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அங்குள்ள இருக்கைகளை உடைத்துச் சேதப்படுத்தினர். தியேட்டர்களில் இனிமேல் டிரெயிலர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் இன்று முடிவு செய்துள்ளனர்.