இயக்குநர் மீது போலீசில் புகார்!

Filed under: சினிமா |

“காளி” ஆவண பட இயக்குநர் லீனா மணிமேகலை பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியவர்.

அதோடு மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளருமாக இருந்து வருபவர். தற்போது இவர் “காளி” என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். நாடக பாணியிலான இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் காளிதேவி ஒரு கையில் LGBTQ சமூகத்தினரின் கொடியை ஏந்தியபடி, மறுகையில் சிகரெட் புகைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து மத ஆர்வலர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் செய்துள்ளனர். புதிய ஆவண படமான ‘காளி’ தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். “காளி” பட போஸ்டர் மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று அவர் அளித்த மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.