இயக்குனர் சந்தீப் ரெட்டியின் தகவல்!

Filed under: சினிமா |

சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து அனிமல் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் இத்திரைப்படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இத்திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் 527 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்போது படம் ரிலீஸாகி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில் 835 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. விரைவில் இத்திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என சொல்லப்படுகிறது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா பேட்டியில், “அனிமல் இரண்டாம் பாகம் “அனிமல் பார்க்” என்ற பெயரில் வெளியாகும். ஆனால் அதன் ஷூட்டிங் 2025ம் ஆண்டுதான் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.