இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணையும் விக்ரம்!

Filed under: சினிமா |

நடிகர் விக்ரம் நடித்த “கோப்ரா” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசான நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவிலும் அதையடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்கும் தேதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படம் சுமாரான வெற்றியை பெற்றது. விக்ரமுடன் இணைந்துள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.